பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை […]
