பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாகனங்களில் சுவாமி புறப்பாடு தினமும் இரவில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், உதய கருட சேவையும் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் மாலை செம்மையாக […]
