தமிழகத்தில் ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்து இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று அதனை எடுத்துக் கொள்ள வழி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர இதர […]
