திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் 3500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மண்பானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து மலேசியாவிற்கு அனுப்புவதற்காக மண்பானைகளில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த […]
