சட்ட விரோதமாக மண்ணுளிப் பாம்பை பிடித்து வைத்திருந்த குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிநாதபுரம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அரவிந்த் வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]
