கிணற்றை தூர்வாரிகொண்டிருக்கும் போது மண்ணுக்குள் புதைந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு போதுமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பெரியகருப்பனும், அதே பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவரும் போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் தூர் வாரிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மண் சரிந்து இருவரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இதனையடுத்து அலறல் […]
