மணல் திருடிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வி.எஸ்.கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மடத்தச்சம்பாடு பகுதியில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கணேசன் மணல் மற்றும் செங்கற்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார். அதனை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், சபரிகண்ணன் ஆகியோர் திருடி சென்று விட்டதாகவும், மேலும் நிலத்தை சுற்றி அடைத்து வைத்திருந்த கம்பி வேலியை […]
