நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்ட பெருங்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஐயர் கிராமங்களில் நடக்கும் சட்ட விரோதமான மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் ஆஜராகி அந்த பகுதியில் செயல்படும் மணல் குவாரிகள் […]
