அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவரான ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் அதிகளவில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு கிடைத்துள்ளது. […]
