சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பஜார் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து டிராக்டரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மணலை அங்கேயே கொட்டிவிட்டு தப்பியோட […]
