சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கராம்பேட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சங்கராம்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் வெட்டாற்று பகுதியில் மணல் அள்ளிக் கொண்டுடிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மாட்டு […]
