ஏரி மணல்களை கடத்துவதற்கு பயன்படுத்த பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி எந்திரம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தப்பூர் கிராமத்தில் இருக்கும் சீத்தேரி பகுதியில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.சி.பி மூலம் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சீத்தேரி பகுதியில் அரசு […]
