திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் காணாமல் போனதால் மணமகனின் வீட்டார் நஷ்டஈடு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்ய பட்டிருந்தது . இந்த திருமணம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக திருமண காகிதங்கள் அச்சிடப்பட்டு, திருமணப்புடவை, நகை உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]
