பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளை குறித்து அறிக்கையாக தயார் செய்து வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வருடம் தோறும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசிடம் இருந்து வழங்கப்படும் மடிக்கணினிகள் திருடு போகிறது என பல்வேறு பள்ளிகளிலிருந்து புகார்கள் நிறைய வந்திருக்கின்றன. இதனால் 2012 முதல் தற்பொழுது வரை காணாமல்போன மடிக்கணினிகளை பற்றிய தகவல்களை பள்ளிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள புகாரை […]
