ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகிலுள்ள காவல்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200 இரட்டை மாட்டுவண்டியில் நேற்றிரவு புறப்பட்டு, இன்றுகாலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். இந்த கிராமமக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 வருடங்களுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டுவண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2வது அணியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர். அதன்பின் நாளை வட திருக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் […]
