ஊரடங்கு காரணமாக பல கோடி மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு இருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் […]
