மனு ஸ்மிருதி தொடர்பாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொளி கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி […]
