விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்து திருப்பதியில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்விற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 30 […]
