ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் வேலை இழந்து தமிழக இளைஞர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து தமிழகத்தை அடைந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட அவர்களால் தமிழகத்திற்கு வர இயலவில்லை. அவர்கள் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அடிப்படை வசதிகள் […]
