மலேசியாவில் 18வது மாடியிலிருந்து தாயொருவர் ஐந்து வயது குழந்தையுடன் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த மென் பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி […]
