குடும்ப தகராறில் 5 வயது மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவர் மனைவி செந்தாமரை. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு லாவண்யா(7), மோனிகா (5) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த […]
