ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். […]
