மகன் சிறைக்கு சென்றதால் தந்தை மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சரத்துப்பட்டியில் வைரமுத்து (55) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைபட்டு உள்ளார். இதனால் வைரமுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் […]
