சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டு குவோ காங்டாங் என்பவரின் 2 வயது மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர். கடத்தப்பட்ட தனது மகனை தேடி அவர் மோட்டார் பைக்கில் சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். அப்போது மகனைத் தேடி அலையும் முயற்சியின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இருபத்தி நான்கு ஆண்டுகளில் இவரது 10 இருசக்கர வாகனங்கள் […]
