மதுபோதையில் தந்தை மகனை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் விசைத்தறி தொழிலாளியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேட்டரிங் தொழிலாளியான மணி(37) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மது போதையில் சுப்பிரமணி மற்றும் மணி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். […]
