இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை […]
