தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் என ஆறு காவல் நிலையத்தைச் சேர்ந்த 119 போலீசாருக்கு தனியார் பள்ளியில் வைத்து இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை உபயோகப்படுத்துவது குறித்து பயிற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபடும் போது எளிதில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிய செயலி செயல்படும் எனவும், இருக்கும் இடத்தில் இருந்து குற்றவாளிகளை எளிதில் […]
