தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்ற பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் எள்ளுக்காட்டுப்பறை பகுதியில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் கூடலூரை சேர்ந்த சிவகாமன்(35), மந்தையம்மன் […]
