பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் செங்கம் மருத்துவ அலுவலரான அருளானந்தம், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில் போலீசார் ஆகியோர் போலி மருத்துவர்களை பிடிக்க புதுப்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் வருவதை கண்ட போலி […]
