கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் கஸ்தூரிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுஜிதா(34) . இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறி அந்த பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். […]
