சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஓட்டுக்காக போலி தங்க காசுகளை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கம்பி கொல்லை பகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் மணிமேகலை. இவரது கணவர் துரைப்பாண்டி கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு சுமார் ஆயிரம் தங்கக் காசுகளை வீடு வீடாக சென்று, மக்களிடம் கொடுத்து தம் மனைவிக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பின், சிலர் அந்த காசுகளை நகை […]
