மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சத்யா மாத்திரைகள் கொடுப்பதோடு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடைக்கு சென்று சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக […]
