வங்கியில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரேச புரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜாய்குட்டி என்ற ஒரு மகன் உள்ளார். இதனை அடுத்து வேளாங்கண்ணி தன்னுடைய வீட்டுப் பத்திரங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள ஈக்விடாஸ் மைக்ரோ நிதி வங்கியில் தற்போது மேலாளராக பணியாற்றி வரும் இளமுருகு என்பவரிடம் 2,70,000 ரூபாய்க்கு அடமானம் வைக்க விண்ணப்பித்துள்ளார். […]
