போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது […]
