பிரான்ஸ் அரசு மாலியிலிருந்து தங்கள் துருப்புகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருக்கிறது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அந்நாட்டில் மத போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த படை வீரர்கள் போரில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசு தங்கள் துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டிற்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு […]
