கடந்த 16ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க்குற்றவாளி” என்று அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்க அதிபர் தனது குண்டுகளால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இது மன்னிக்கத்தக்கது அல்ல” […]
