ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிம்ண்டாலான தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். […]
