மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர். மேலூர் அருகே கம்பர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது. […]
