திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி, ஜெயராஜ், குழந்தை, குமரேசன் ஆகியவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக குபேந்திரன் வேடசந்தூர் அரசு […]
