கோவையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பேரணி நடத்த அனுமதி இல்லை என்ற காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவிதமான முறையான அனுமதி பெறாமல் பரப்பி வருகின்றனர். அது சட்ட ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், […]
