போராட்டத்தின்போது உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் ஜோதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 23 – ஆம் தேதி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமலும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமலும் நடைபெற்றது. […]
