கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது அவர் 2 வருடங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க பிரார்த்தனை செய்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருக்கும் […]
