போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காததால் போதை பொருள் விற்பனையானது அதிகரித்துள்ளது […]
