கஞ்சா போதையில் வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கியுள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்று பழனியாண்டவர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சாதுக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]
