தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் வாக்காளர் தினம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லாத வாக்கு பதிவு மற்றும் வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். […]
