தமிழகத்தில் போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை வழக்கமான முறையில் செய்வது போல வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாலியல் குற்றம் தொடர்பான போக்சோ சட்ட வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு வழங்க வேண்டும். அது மரணமாக இருந்தாலும், பிற குற்றங்களாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்றடைந்தவுடன் உடனடியாக வழங்க வேண்டும். […]
