போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குப்பக்குறிச்சி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
