சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]
