சென்னையில் கனமழை காரணமாக பொது போக்குவரத்து பெரிய அளவில் முடங்கியுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 10% பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது. வழக்கமாக சென்னை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் 3,100 பேருந்துகள் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த மழை பாதிப்புகளால் 400 பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப் மற்றும் ஆட்டோக்களின் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு வழக்கத்தை விட 200% கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. […]
