புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
